மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

15 Apr, 2026 | 09:15 AM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

மதுரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலை ஒன்றிற்கு அருகில் ஏற்பட்ட தகராறில் மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மானகொல, ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பகையே இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரப்பலகை ஒன்றினால் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நபர் ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய ஏலமுல்ல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மதுரட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23