(இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)
மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அதன் வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரானிய நாணயமான 'ரியால்' மூலமே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ஈரானிய பாராளுமன்ற பிரதி சபாநாயகர் ஹாஜி பாபாயி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பல மணிநேரம் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் ஒரு முக்கிய தடையாக இருந்துள்ளது. எனினும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஊடகவியாளர்களிடம் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இது குறித்து எவ்வித நேரடி கருத்தையும் வெளியிடவில்லை.
ஹோர்முஸ் நீரிணை என்பது ஈரானின் "சிவப்புக்கோடு" என ஹாஜி பாபாயி எச்சரித்துள்ளார். மேலும், இராணுவக் கப்பல்கள் இந்த நீரிணையைக் கடக்க முயற்சித்தால் அவை கடுமையாக எதிர்கொள்ளப்படும் என ஈரானிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணியின் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படையின் இரண்டு அழிப்புப் போர்க்கப்பல்கள் அந்தப் பகுதியைக் கடந்து சென்றதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் நீரிணையைக் கடந்ததாகக் கூறப்படும் தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM