(இணையத்தள செய்திப் பிரிவு)
கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் திருடப்பட்ட சில சொத்துக்களுடன் நேற்று சனிக்கிழமை (11) களனி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களனி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் இலங்கை விமானப்படை மூலம் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM