பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமிந்த ரவி ஜயநாத் எனப்படும் 'தெமட்டகொடை சமிந்தவை' கொலை செய்யும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பூஸா சிறைச்சாலையிலிருந்து தன்னை வெலிசறைகடற்படை முகாமிற்கு மாற்றுவதைத் தடுப்பதற்காகவே சமிந்த இதனைத் திட்டமிட்டுள்ளாரோ என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொடை சமிந்த, தற்போது பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு இருந்தவாறே அவர் கையடக்கத்தொலைபேசி ஊடாகக் குற்றச் செயல்களை வழிநடத்துவதாக கடந்த காலங்களில் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இதனடிப்படையில், தெமட்டகொடை சமிந்தவை வெலிசறை கடற்படை முகாமிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு வைத்து அவர் படுகொலை செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் குரல் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் வழிகாட்டலின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நீதிமன்றத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளிடமும் தெமட்டகொடை சமிந்தவிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
பூஸா சிறையிலிருந்து தன்னை வெலிசரவுக்கு மாற்றுவதைத் தடுப்பதற்காகவே தெமட்டகொடை சமிந்த இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருக்கலாம் என பொலிஸார் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM