இலங்கையில் மீண்டும் ஒரு மின்வெட்டு அச்சம்

12 Apr, 2026 | 09:04 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையில் மீண்டும் ஒரு எரிபொருள் நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், பாரிய மின்சார நெருக்கடி குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது.

கடந்த வாரம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணத்தை சுமார் 25 சதவீதத்தினால் உயர்த்தியமை இதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமர திசாநாயக்கவின் அண்மைய பாராளுமன்ற உரையின் போது மின் கட்டணம் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தன. மக்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கருத்திற்கொண்டு, நேரடியாகவே பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சென்று எதிர்க்கட்சிகள் நிலைமையை விளக்கியுள்ளன.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வை மக்கள் ஒருவாறு சகித்துக் கொண்டாலும், மின்சாரக் கட்டண உயர்வு அல்லது மின்வெட்டு என்பது மக்களின் பொறுமைக்கு விடப்படும் சவாலாக அமையும் என்பதை  எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை அரசியலில் மின்சார நெருக்கடி என்பது ஆட்சி மாற்றங்களுக்கு வித்திட்ட பலமான காரணியாக இருந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்ஷ அரசு எரிபொருள், எரிவாயு விலை உயர்வுடன் நீண்ட நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதே கோட்டாபய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.

அதே போன்று 1997 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில்  மின்சார அமைச்சராக இருந்த அனுருத்த ரத்வத்தே, போர்க்கள வெற்றிகளுக்காக 'சபுமல் குமாரயா' எனப் போற்றப்பட்டார். ஆனால், மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டபோது அதே மக்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இது சந்திரிகா அரசின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் ஒரு பாரிய மின்சார நெருக்கடி ஏற்பட்டு 10 முதல் 12 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 100 நாட்களுக்குள் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக உறுதியளித்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சராகப் பொறுப்பேற்ற கரு ஜயசூரிய, ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் 'கறுவல ஜயசூரிய' (இருள் ஜயசூரிய) என விமர்சிக்கப்பட்டார். இருப்பினும், தேர்தல் வாக்குறுதியின்படி 100 நாட்களுக்குள் நாட்டிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க அவர் நடவடிக்கை எடுத்தார்.

வரலாறு முழுவதும் மின்சார நெருக்கடி என்பது இலங்கையின் ஆட்சியாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்துள்ளதை இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள மின் கட்டண உயர்வும், எதிர்வரும் மின் நெருக்கடி அச்சமும் தற்போதைய அரசியல் சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23