லெபனான் மீது இஸ்ரேல் இன்று (11) நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல குடியிருப்பு கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு ஜெப்சிட் நகரமும் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2024இல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தபோதிலும், மார்ச் 2 ஹிஸ்புல்லா நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் தெற்கு லெபனானில் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் அமெரிக்கா முன்னெடுக்கவுள்ளது.
இஸ்ரேல் மற்றும் லெபனான் பிரதிநிதிகள் பங்கேற்கும் நேரடிப் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் வொஷிங்டனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் ஈரான் மீதான போரை இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.
அதையே, லெபனான் விவகாரத்திலும் பின்பற்ற அமெரிக்கா முயன்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதை லெபனான் அரச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM