சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு புதிய நியமனம்!

Published By: Digital Desk 1

11 Apr, 2026 | 02:24 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 4 வெவ்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 154 பேருக்கு புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வெறும் தொழில்சார் அறிவையும் திறமையையும் தாண்டி, மனிதாபிமானத்துடன் கூடிய சேவையை சுகாதாரத்துறையினர் வழங்கவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (10) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கதிரியக்க நிபுணர்கள் 69 பேருக்கும், ஒலியியல் தொழில்நுட்பவியலாளர்கள் 10 பேருக்கும், பூச்சியியல் உதவியாளர்கள் 4 பேருக்கும், ஆய்வக உதவியாளர்கள் 71 பேருக்கும் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜேமுனி, சவாலான காலகட்டத்திலும் நாட்டின் இலவச சுகாதார சேவையை மேம்படுத்த அதிகப்படியான நியமனங்களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்கள் வெறும் தொழில்நுட்ப அறிவை மட்டும் கொண்டிருக்காமல், நோயாளர்களிடம் அன்பாகவும் மனிதாபிமானத்துடனும் பழக வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சம்பளம் மற்றும் உபகரணங்களுக்கு நாம் நீதியாகச் செயல்பட வேண்டும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உரையாற்றுகையில், குறிப்பாகப் பெண் கதிரியக்க நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மார்பக புற்றுநோய் பரிசோதனைகளுக்கு பெரும் உதவியாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற மனப்பாங்குடன் நோயாளர்களை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் மொத்த அரச ஊழியர்களில் 1,50,000 பேர் சுகாதாரத்துறையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

தொழில்சார் உரிமைகளுக்காகப் போராடுவதைப் போலவே, நோயாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பது ஊழியர்களின் கடமை என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரதி பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.   

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23