( இணையத்தள செய்திப் பிரிவு )
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் அனைத்துப் பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்புகளில், ஒட்டுமொத்தமாக 34,493 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 654 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 21 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 207 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 119 இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வீதி ஒழுங்குமுறைகளை மீறிய சாரதிகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 183 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 67 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பாக 4,627 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM