உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து பேசப் போவதில்லை ; குமார ஜயகொடி

11 Apr, 2026 | 10:21 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2015 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நான் செயற்பட்டுள்ளேன். உர விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து பேசப் போவதில்லை. எம்மை ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது. இந்த வழக்கு முடிவடைந்தவுடன்  பெயர் விபரங்களுடன் விடயங்களை நான் வெளிப்படுத்துகிறேன். ஊழல்மிக்க ராஜபக்ஷர்களும் இதில் முன்னிலையில் உள்ளார்கள். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால்  அமைச்சு பதவியில் இருந்து அனைத்தையும் தருகிறேன் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற  நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஊழலுக்கு எதிரான  கொள்கையை  முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறோம். அரசாங்கத்தின் சகல உறுப்பினர்களும் ஊழலுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.

ஊழலுக்கு எதிராக செயற்படும்  எமது கொள்கையை சவாலுக்குட்படுத்தும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது. ஏனெனில் கடந்த காலங்களில் அரச நிதியை  கொள்ளையடித்தவர்கள் தான் இன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள்.

2015 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஊழலுக்கு எதிராக நான் செயற்பட்டுள்ளேன். உர விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அது குறித்து பேசப் போவதில்லை.

எம்மை ஊழல்வாதிகள் என்று விமர்சிக்கும் தகுதி எவருக்கும் கிடையாது. இந்த வழக்கு முடிவடைந்தவுடன்  பெயர் விபரங்களுடன் விடயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்.

ஊழல்மிக்க ராஜபக்ஷர்களும் இதில் முன்னிலையில் உள்ளார்கள். என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால்  அமைச்சு பதவியில் இருந்து அனைத்தையும் தருகிறேன்.

ஊழலுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதால் எம்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஒருபோதும்  அஞ்சப்போவதில்லை. மக்களின் ஒரு சதத்தை கூட நான் மோசடி செய்யவில்லை. அவ்வாறு மோசடி செய்திருந்தார் அவற்றை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்.

நிலக்கரி கொள்வனவு பற்றி பேசப்படுகிறது. இதுவரை காலமும் இடம்பெற்ற தவறான முறைமை  திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி விநியோகத்தர்களுடன் நான் தனிப்பட்ட முறையில் நான்  தொடர்புக் கொள்ளவில்லை.

ராஜபக்ஷ முகவர்களுடனான  கொடுக்கல் வாங்கல்களை  இடை நிறுத்தியதால் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுஜன பெரமுனவின் தாளத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆடுகிறார்கள்.

யோசித ராஜபக்ஷவின் நண்பரின் நிறுவனத்திடமிருந்தே கடந்த காலங்களில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டது. இந்த முறைகேடான கொள்முதலை மாற்றியமைத்ததால் குற்றஞ்சாட்டுகிறார்கள். 

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை எவராலும் பலவீனப்படுத்த முடியாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23