12 வயது சிறுமி ஒருவரை பாலியல்வன்புணர்வு புரிந்த குற்றத்திற்கு 53 வயதான புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
கடந்த 09.09.2012 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயது சிறுமி ஒருவரை 53 வயதுடைய உறவு முறையானவர் ஒருவர் பாலியல்வன்புணர்வு குற்றம் புரிந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரைக்கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வுப்பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
சாட்சிகளின் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் 11.09.2017 தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது..
இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனினால் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் இரண்டு வருட கடூழியச்சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் ஒரு மாதம் சாதாரண சிறை அனுபவிக்க நேரிடும் எனத தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM