செப்டெம்பர் வரை வறட்சி நீடிக்கலாம்: நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

Published By: Digital Desk 1

09 Apr, 2026 | 02:09 PM
image

(இணையத்தள செய்திப் பிரிவு )

தென்மேற்கு பருவமழை காலப்பகுதியில் அசாதாரண காலநிலை மாற்றம் ஏற்பட்டால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை தெரிவித்தார்.

நிலவும் இந்தச் சூழலைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக நீரை மிகவும் அவதானத்துடன் முகாமைத்துவம் செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், மே மாதத்தின் மூன்றாவது வாரத்தின் பின்னரே இந்த வெப்பமான சூழல் படிப்படியாகக் குறையும் எனவும் தெரிவித்தார். 

மே மாதம் 20ஆம் திகதிக்குப் பின்னர் தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு தணிந்தாலும், அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மழைவீழ்ச்சி குறைவடைந்து செப்டம்பர் வரை வறட்சி நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37