மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது; துப்பாக்கி மீட்பு

Published By: Vishnu

08 Apr, 2026 | 07:13 PM
image

மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாகியால் சுட்டுக் கொன்ற இருவரை செவ்வாய்க்கிழமை (8) கைது செய்ததுடன் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான மங்களகம பொலிஸ் பிரிவில் உள்ள  பக்கியல்ல சின்னவத்தையைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணன் என்பவரின் பெண் எருமை மாடு ஒன்றை  சம்பவ தினமான அதிகாலையில் மங்களகம 25 வது மையில் கல் பகுதியில் வைத்து துப்பாகியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அந்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஸர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07
news-image

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2026-04-14 12:12:23
news-image

மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி...

2026-04-14 12:39:18
news-image

பஸ் கட்டணம் அதிகம் வசூலிக்கப்பட்டால் உடனே...

2026-04-14 12:38:32
news-image

லக்கலை, ரனமுரே பகுதிகளுக்கு புதிய பஸ்...

2026-04-14 11:56:26
news-image

குண்டசாலையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள்...

2026-04-14 11:49:21
news-image

டித்வா புயல் இழப்பீடு தொடர்பில் புதிய...

2026-04-14 12:35:48
news-image

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக்...

2026-04-14 11:50:02
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புத்தாண்டு விசேட வழிபாடுகள்:...

2026-04-14 12:31:17