உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA - Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
செஸ் வரி (Cess Tax), உள்நாட்டுத் தொழில்துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் பொருட்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
தரம் குறைந்த பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருதல் மற்றும் அது சார்ந்து எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தொடர்ந்தும் ஆராயப்பட்டது.
கொள்கலன்களை விடுவித்தல் மற்றும் அதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் அரச அதிகாரிகள், இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் தலைவி டானியா எஸ். அபேசுந்தர உட்பட அதன் உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM