முல்லை. முள்ளியவளை அஞ்சல்  அலுவலகத்தின்  காணியை எதிர்வரும் ஜூலை மாதமளவில்  விடுவிக்க நடவடிக்கை - பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன

08 Apr, 2026 | 05:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

முல்லைத்தீவு முள்ளியவளை அஞ்சல்  அலுவலகத்தின்  காணியை எதிர்வரும் ஜூலை மாதமளவில்  விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக  இராணுவத்தினரால் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை  (8) நடைபெற்ற அமர்வின் போது  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள முள்ளியவளை அஞ்சல் அலுவலக காணி தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் தனியார் வாடகை கட்டிடமொன்றில் நடத்திச் செல்லப்படுகின்றது. அந்த தபால் அலுவலகத்திற்கான காணி இப்போது இராணுவத்தின் 23ஆம் படையணியினால் பயன்படுத்தப்படுகின்றது. அந்த காணியை 2026 ஜுலை மாதமளவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தினரால் வாய்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இதனை தபால் திணைக்களம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

2027ஆம் ஆண்டில் அந்த தபால் அலுவலகத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒதுக்க முடியுமாக இருக்கும்.வடக்கில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன. அதன்படி குறித்த அஞ்சல்  நிலைய காணியை துரிதமாக விடுவித்து அந்த இடத்தில் அஞ்சல்  நிலையத்தை நடத்திச் செல்லத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09