(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
பொருளாதார நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்களுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய 100 பில்லியன் ரூபாவும் போதாது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். பிணைமுறி மோசடியாளர்கள்,அந்த மோசடி தொடர்பில் அறிக்கை வெளியிட்டவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய மோதல் நிலைமையில் இருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில், அந்த மோதல்களை கொண்டு அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கலாம் என்று எதிர்க்கட்சியினர் சிந்திக்கிறார்கள்.
மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஏற்பட்டவுடன் நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.
பொருளாதார நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்க ளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கிய 100 பில்லியன் ரூபாவும் போதாது எ ன்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். பிணைமுறி மோசடியாளர்கள், அந்த மோசடி தொடர்பில் அறிக்கை வெளியிட்டவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.
தற்போதைய நெருக்கடியான நிலைமையை தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது. ஆகவே தற்போதைய இக்கட்டான நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வோம் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM