இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட புனித வெள்ளி பாதயாத்திரை

04 Apr, 2026 | 06:07 PM
image

இயேசு கிறிஸ்து மனுக்குலத்துக்காக தன் உயிரையே அர்ப்பணம் செய்த நாளான வெள்ளிக்கிழமை (03) அவருடைய சிலுவை பாடுகளை  நினைவுகூரும் முகமாக பி.ப. 3 மணியளவில் இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் பாதயாத்திரையொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாதயாத்திரை கொழும்பு 14, ஆமர்வீதியில் அமைந்துள்ள பெர்னாந்து பிளேசில் ஆரம்பித்து, மருதானை ஊடாக கொழும்பு ஹைட் பார்க் வரை சென்றடைந்தது. பின்பு இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை தியானித்து ஆராதனை நடத்தப்பட்டது. 

கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் Dr. C.V. இராஜேந்திரம் வழிநடத்தி, தேவ செய்தி வழங்கியதையும் மக்கள் கூடி ஆராதிப்பதையும் படத்தில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right