அதிநவீன கண் அறுவை சிகிச்சை நுண்ணோக்கியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது கொழும்பு மத்தி ரோட்டரி கழகம் 

03 Apr, 2026 | 03:57 PM
image

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தக்கூடிய அதிநவீன OPMI லுமேரா அறுவை சிகிச்சை நுண்ணோக்கி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. 

இந்த நன்கொடை வழங்கும் நிகழ்வானது குறித்த வைத்தியசாலையில் ஏப்ரல் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 

கொழும்பு மத்தி ரோட்டரி கழகத்தினால் (Rotary Club of Colombo Mid City) ரோட்டரி அறக்கட்டளை (Rotary Foundation) மற்றும் சர்வதேச பங்காளர்களின் ஆதரவுடன் "குளோபல் கிராண்ட்" (Global Grant) திட்டத்தின் கீழ் இந்த கண் அறுவை சிகிச்சை நுண்ணோக்கி கருவியானது வவுனியா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. 

இந்த நுண்ணோக்கியானது, கண் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகும். இதன் மொத்த மதிப்பு 47 மில்லியன் ரூபா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right