பொதுவாக குழந்தைகள் பிறந்து நான்கு மாதத்திற்குள் அவர்களுடைய தலை நின்று விட வேண்டும் என்றும்.. ஆறு அல்லது ஏழு மாதத்திற்குள் யாருடைய உதவியும் இன்றி உட்கார்ந்து விட வேண்டும் என்றும், ஒன்றரை வருடங்களுக்குள் யாருடைய உதவியும் இல்லாமல் நிற்கவும் நடக்கவும் தொடங்க வேண்டும் என்றும், இதுதான் இயல்பான வளர்ச்சி என்றும் குழந்தைகள் நல வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய சூழலில் இந்த வளர்ச்சி சீராக நடைபெறவில்லை என்றால் அதிலும் உங்களுடைய பிள்ளையின் இடுப்பு மூட்டு சீராக வளர்ச்சி அடைவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால்.. அக்குழந்தைக்கு மருத்துவ மொழியில் டெவலப்மென்டல் டிஸ்ப்ளாசியா ஆஃப் தி ஹிப் என குறிப்பிடப்படும் இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சையை மேற்கொண்டால் முழுமையான நிவாரணம் கிடைக்கும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டில் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒன்று அல்லது இருவருக்கு இத்தகைய இடுப்பு மூட்டு வளர்ச்சி குறைபாடு பாதிப்பு இருப்பதாகவும், இத்தகைய பாதிப்பிற்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
இத்தகைய பாதிப்பு சிசு வயிற்றில் இருக்கும் தருணத்திலோ பிறக்கும் தருணத்திலோ அல்லது வளர்ச்சி பருவத்தில் இருக்கும் தருணத்திலோ ஏற்படுகிறது. மரபணு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்
மேலும் இடுப்பு மூட்டு என்பது ஒரு பந்து குழி மூட்டு ஆகும். ஒரு இயல்பான இடுப்பு மூட்டு- தொடை எலும்பின் மேல் முனையில் உள்ள பந்து போன்ற பெரிய இடுப்பு எலும்பின் ஒரு பகுதியாக அந்த குழியில் பொருந்துகிறது. சில பிள்ளைகளுக்கு இத்தகைய மூட்டு பொருந்துதலில் இட பெயர்வு நடைபெற்று பாதிப்பு உண்டாகிறது.
இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் பிள்ளைகள் பிறக்கும் தருணத்திலேயே காணப்பட்டாலும் ,சில பிள்ளைகளுக்கு அக்குழந்தை வளரும் முதல் வருடத்திலும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மிக அரிதாக கருத்தரிக்கும் பெண்மணியின் வயிற்றுப் பகுதியில் பிரசவ தருணத்தில் பனிக்குட நீர் இயல்பான அளவைவிட குறைவாக இருந்தாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பை பிறக்கும் தருணத்திலேயே வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்தால்.. அவர்களுக்கு ஹார்னஸ் அல்லது பிரேஸ் எனப்படும் பிரத்யேக அங்கியை அணிவித்து இதற்கு நிவாரணம் அளிக்க இயலும். இடுப்பு மூட்டு விலகாமல் இருந்தால் இத்தகைய பாதிப்பு குழந்தை நடக்கத் தொடங்கும் வரை கண்டறிய இயலாது.
அத்தகைய நேரத்தில் அதற்கான சிகிச்சை சிக்கலானதாகவும் ஒருங்கிணைந்ததாகவும் இருக்கும். சில பிள்ளைகளுக்கு பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தும் அதனுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் கூடிய சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
அதே தருணத்தில் உங்களுடைய பிள்ளைகள் பிறந்து ஆறு மாதத்தில் வாக்கர் எனப்படும் பிரத்யேக நடை வண்டியில் உட்கார வைத்து வளர்த்திட வேண்டாம் என்றும் குழந்தைகளை கடந்த தலைமுறையைச் சார்ந்த எம்முடைய முன்னோர்களை போல் இடுப்பில் தூக்கிக் கொண்டு சோறு ஊட்டும் பணியை மேற்கொள்ளுங்கள் என்றும் வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வைத்தியர் தனசேகர் - தொகுப்பு அனுஷா.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM