முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள செல்வபுரம் கிராமத்தில் மகனின் தாக்குதலில் தந்தையை காயம் அடைந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் உள்ள இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவின் செல்வபுரம் கிராமத்தில் ஒரே வீட்டில் வசிக்கும் தந்தை மீது மகன் மோசமான முறையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 வயது நிரம்பிய குறித்த முதியவரை அவரது மகன் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் குறித்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அயலவர்களின் உதவியுடன் அழைத்து செல்லப்பட்டு வைத்திய உதவிகள் இடம்பெற்ற வருகின்றன.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸாரிற்கு தகவல் வழங்கிய போதிலும் இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. மாங்குளம் பொலிஸாரின் அசமந்த போக்கினால்குறித்த பகுதி மக்கள் நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களிற்கு உள்ளாகி வருகின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளிற்கான வைத்தியசாலை பொலிஸார் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM