தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Robert

10 Sep, 2017 | 02:41 PM
image

தேயிலை காணியில் சோளம் பயிரிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை ஹென்போல்ட் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 08 ஏக்கர்  தேயிலை மலைகளை தோட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்காமல் காடாக்கியுள்ளதாகவும், இதேவேளை இத்தோட்டத்தில் நல்ல விளைச்சலை தந்த 05 ஏக்கர் தேயிலை மலையினை 2010 ஆம் குத்தகை அடிப்படையில் தனியாருக்கு விவசாயம் செய்ய வழங்கியது.

அப்போது தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்ட காணியின் குத்தகை முடிந்தப்பின் மீண்டும் தேயிலை கன்றுகள் நாட்டப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்ததையடுத்து விவசாயம் நடவடிக்கை முன்னெடுக்கப்படது.

05 வருடங்கள் குத்தகை முடிந்தபின் மீண்டும் குறித்த இடத்தினை தோட்ட நிர்வாகம் மீளப்பெற்று  தேயிலை கன்றுகள் போடாமல் கைவிட்டது. இதனால் தொழிலாளர்கள் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிர்வாகம் மலைகளில் சோளம் பயிர்செய்கை செய்ய தீர்மானம் செய்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 08 மணிக்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு மூடப்பட்டுள்ள காணிகளை துப்பரவு செய்து தேயிலை கன்றுகள் நாட்டுமாறும் சோளப் பயிர் செய்கையை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினர்.

இதேவேளை தேயிலை மலை மூடப்படுவதால் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை நாட்களை குறைப்பதாகவும், இதனால் தாங்கள் வருமான ரீதியாக பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாதம் சம்பளம் 200 ரூபாய் தொடக்கம் 4000 ரூபா வரை தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கப்பெற்றதாகவும், இதனை கொண்டு குடும்ப செலவினை எவ்வாறு சமாளிப்பது பிள்ளைகளின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என திண்டாடுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

மலையக அரசியல்வாதிகளும் தோட்ட நிர்வாகங்களும் தங்களின் நலன்களில் மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படுவதை கைவிட்டு எங்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இவ்வார்ப்பாட்டம் சுமார் இரு ணி நேரம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37