கணவன்- மனைவி இடையேயான பிரச்சனைக்கு தீர்வு தரும் சூட்சம குறிப்பு

28 Mar, 2026 | 06:05 PM
image

இன்றைய சூழலில் மில்லியன் கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் சில மாத அல்லது சில வருடத்தில் கருத்து வேறுபாடுகளால் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டு, தங்களுக்குள் பிரிவை சுமக்க தொடங்குகிறார்கள்.

இது தொடர்பான புரிதல் இரண்டு பேருக்கும் இருந்தாலும் மாய தடையின் காரணமாக இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரிவு தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும். பரிகாரங்களை மேற்கொண்ட பிறகும் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர தீர்வை நோக்கிய பயணத்தில் தேக்க நிலையே நீடிக்கும். இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் கணவன் மனைவி இடையே பிரிவு நிகழாமல் இருப்பதற்கு சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியுள்ளனர்.

கணவன் -மனைவி என இருவரும் தாம்பத்யம் மேற்கொள்ளும் படுக்கை அறையில் எந்தவித கடவுளர்களின் உருவங்களும் இடம்பெறக் கூடாது. எம்மில் சிலர் காலையில் கண்விழித்த உடன் கடவுளின் திருமுகத்தில் தான் கண் விழிக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய படுக்கையறையில் கடவுளர்களின் திருவுருவங்களை இடம்பெறச் செய்கிறார்கள் இது உங்களுக்கு சாதகமான பலன்களை விட அசுப பலன்களையே வழங்கும்.

படுக்கையறை என்பது மனிதர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் அறை. அதிலும் இரவு என்பது எம்முடைய ஆரா ஆற்றல் குறைந்திருக்கும் தருணம். மேலும் கடவுளின் திருவுருவப் புகைப்படங்கள் இருந்தால் அங்கிருந்து கிடைக்கும் தெய்வீக அலைகள் கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய உறவை சீர்குலைக்கும்.

இதன் காரணத்தினால் படுக்கையறையில் கடவுளரின் திரு உருவ புகைப்படங்களை இடம் பெறச் செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும் என ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதே தருணத்தில் உங்களுடைய படுக்கை அறையில் கண்ணாடி பதித்த பீரோ மற்றும் கண்ணாடி பதித்த டிரெஸ்ஸிங் டேபிள் இருந்தாலும்... கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு நீளும். இந்த கண்ணாடியையும் அதற்குரிய இடத்தில் வைத்திருக்க வேண்டும். அதையும் படுக்கையறையில் இடம்பெறச் செய்தால்... அதிலிருந்து கிடைக்கும் எதிர்வினை- தம்பதிகளின் மனதிற்குள் எதிர்மறை ஆற்றலை பரவச் செய்து அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைக்கு வேட்டு வைத்துவிடும்.

இதனால் படுக்கையறைக்குள் ஒப்பனை செய்து கொள்வதற்கான கண்ணாடியை இடம்பெறச் செய்வதை முற்றாக தவிர்க்க வேண்டும். இதனை நீங்கள் செய்த பிறகு கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடு மாயமாய் மறைய தொடங்கி... அன்பும்,  புரிதலும் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடைகளை தகர்க்கும் பிரத்யேக வழிமுறை..!

2026-08-18 16:38:10
news-image

பணத்தை சேமிக்கும் சுருக்கு பை சூட்சுமம்!

2026-08-17 15:20:29
news-image

உங்கள் ராசியும் அதிர்ஷ்ட வண்ணமும்

2026-08-15 17:08:56
news-image

செவ்வாய் தோஷம் நீங்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-14 14:25:37
news-image

பாக்யத்தை அருளும் பூஜையறை

2026-08-12 13:51:55
news-image

தீர்வு தரும் வெற்றிலை வழிபாடு

2026-08-11 16:26:03
news-image

பெண் சாபம் மற்றும் தோஷங்கள் நீங்குவதற்கான...

2026-08-10 15:33:08
news-image

திசை மாறி பயணிக்கும் பிள்ளைகளை நெறிப்படுத்துவதற்குரிய...

2026-08-07 16:11:17
news-image

பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

2026-08-06 18:15:57
news-image

சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான எளிய வழிமுறை..!

2026-08-05 17:01:02
news-image

ராசிக் கல் சூட்சமங்கள்

2026-08-04 19:17:09
news-image

மன அழுத்த மேலாண்மைக்கான சூட்சம வழிபாடு..!?

2026-08-04 15:27:31