வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம், புளியங்குளம் ஆகிய பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான பொதுமக்களின் முறைப்பாடுகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (25) பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி பெற்றிருந்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஏ9 வீதி, பரசங்குளம், புளியங்குளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு மக்கள் தொடர்பகத்தில் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர், இதன்போது கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த பொது மக்களினால் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்ட வனவள திணைக்களத்தினரால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகளையும், அதற்குரிய ஆவனங்களையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் மக்களால் தெரிவிக்கப்பட்ட தமதுபக்க நியாயாதிக்கத்தையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் விரைவில் குறித்த காணிகளை நேரில் வருகைதந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் மக்களால் கையளிக்கப்பட்ட ஆவனங்களை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், விடயத்தை அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM