நீர்க்கட்டணத்தில் அதிகரிப்புச் செய்வதை தவிர்க்க முடியாதாம் : ஹக்கீம்

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 02:35 PM
image

நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்ய வேண்­டிய நிலைமை தோன்­றி­யுள்­ளது.  அதனால் சமுர்த்தி பெறு­கின்­ற­வர்கள் பாதிக்­கப்­ப­டாத வகையில் நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்புச் செய்­ய­வுள்­ள­­தாக நீர்­வ­ழங்கல் மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நீர்க்கட்­ட­ணத்தில் அதி­க­ரிப்பு செய்ய வேண்­டிய ஒரு சூழல் தற்­போது தோன்­றி­யுள்­ளது. காரணம் சில பகு­தி­களில் மழை­வீழ்ச்சி அதி­க­மாக பதி­வா­னாலும்  வடக்கின் சில   பகு­தி­களில் வரட்சி நீடித்து வரு­கின்­றது.

அவ்­வா­றான நிலை­மையில் தற்­போது நீர் சுத்­தி­க­ரிப்பு செல­வு­களும் அதி­க­ரித்­துள்­ளன. இருப்­பினும் அதனால் நீர்க்கட்­ட­ணங்­களில் அதி­க­ரிப்­புக்கள் எதுவும் தற்­போ­து­வ­ரையில் செய்­யப்­ப­ட­வில்லை. 

தற்­கா­லத்­திலும் கூட 80 வீத­மா­ன­வர்கள் பாது­காப்­பான நீர் நிலை­க­ளி­லி­ருந்து நீரை பெற்­றுக்­கொண்­டாலும் 40 வீதத்­தினர் மாத்­தி­ரமே குழாய் நீரை பெற்­றுக்­கொள்­கின்­றார்கள். இதனை 2020 ஆம் ஆண்­ட­ளவில் 60 வீத­மாக அதி­க­ரிக்க பெரும் பிர­யத்­த­னங்­களை அமைச்சு மேற்­கொண்டு வரு­கின்­றது.

அந்த செயற்­பாட்­டினை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க தற்­போது எமக்கு முத­லீ­டுகள் அவ­சி­ய­மா­கின்­றது. காரணம் நாம் நீரை குழாய் வழி­யாக அனுப்பும் போது இடையில் வெடிப்­புக்­களோ அல்­லது தடை­களோ ஏற்­படும் பட்­சத்தில் அவற்றை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு பெரும் நெருக்­க­டிகள் எமக்கு ஏற்­படும். அதற்­கான செலவும் அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றான நிலை­யிலும்  கூட 1000 லீற்றர் நீரை வெறு­மனே 12 ரூபாய்க்கு மாத்­தி­ரமே வழங்­கு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கின்­ற­போது அர­சாங்­கத்தின் நீர் விநி­யோகத்திற்கான செயற்­பாடு மிகவும் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் அதனை முகா­மைத்­துவம் செய்ய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.

அதன் காரணமாக தற்போது நீர் கட்டணத்தில் சிறு மாற்றம் செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் சமுர்த்தி பெறும் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46