யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபி அநுராதபுரத்தில் அமைப்பதே பொருத்தமானதாகும். வடக்கு கிழக்கு மக்கள் இலகுவாக வருகைதரும் வகையில் அமையவேண்டும் என கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
உயிர் நீத்த மக்களை நினைவுகூர மே மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை நேரத்தின் போது யுத்தத்தின் போது உயிர்நீத்த மக்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூருவதற்கான பொதுத் திகதியொன்றை தெரிவுசெய்தல் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த பிரேரணை மீதான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த பிரேரணையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். மூன்று தசாப்தகால யுத்தத்தில் உயிர் நீத்த சகல மக்களையும் நினைவு கூர வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
பாதிக்கப்பட்ட மக்கள் இதனை முன்னெடுப்பது தவறான ஒன்றல்ல. ஆகவே இவ்வாறான ஒரு பிரேரணையினை நாம் மறுக்கவில்லை. எனினும் ஒரு சில காரணிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். குறிப்பாக மூன்று தசாப்த யுத்தத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களே அதிகமாக உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்கள் அனைவரதும் உறவுகள் அவர்களை நினைவு கூருவதற்கான பொருத்தமான இடம் ஒன்றை நாம் தெரிவுசெய்ய வேண்டும். மக்கள் சிரமம் இல்லாது வரக்கூடிய வகையில் அமைய வேண்டும். ஆகவே அநுராதபுரம் இந்த செயற்பாட்டிற்கு பொருத்தமான பிரதேசமாக அமையும் என நாம் கருத்துகின்றோம். அநுராதபுரத்தில் நினைவுத் தூபியினை அமைத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் நீத்த மக்களின் உறவுகள் இலகுவாக வரக்கூடியதாக அமையும்.
மேலும் உயிர் நீத்த மக்களை நினைவு கூருவதற்கான பொருத்தமான தினம் ஒன்றை தீர்மானிக்க வேண்டும் என்ற காரணியும் முக்கியமானது. குறிப்பாக மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்ய முடியும். வேறு எந்தவொரு தினமும் வராத வகையில் ஒருநாளை நாம் தீர்மானிக்க முடியும்.
அத்துடன் இந்த நினைவுத் தூபியை பாதுகாக்க வேண்டும். ஆகவே ஏதேனும் பொது அமைப்பொன்றின் கீழ் இதனை ஒப்படைக்க முடியும். அரச கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய ஏதேனும் ஒரு அமைப்பின் மூலமாக இதன் பராமரிப்பை முன்னெடுக்க முடியும். ஆகவே இந்த விடயங்கள் குறித்து நாம் பொதுவாக கலந்துரையாடி தீர்மானம் ஒன்றிற்கு வர முடியும். எவ்வாறிருப்பினும் இந்த முன்மொழிவினை நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவின் கருத்துக்கு நன்றி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, இந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஆகவே இந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு செயற்படுமாயின் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM