கொழும்பு, -கண்டி அதிவேக பாதையின் நிர்மாண பணிகளுக்கான செலவினத்தை 25 பில்லியன் ரூபாவால் குறைத்துள்ளோம். மேலும் 2019 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைக்கப்பெறாது.
இதனை உலக வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே, அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்திற்கான நிதியை ஜப்பான் மிட்சுபிசி வங்கியில் இருந்து பெற்றுக்கொள்வோம். அதற்கான பேச்சு நடத்தப்படு வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் மத்திய அதிவேக பாதையின் முதலாவது கட்டத்தை சீனாவுக்கும் இரண்டாம் கட்டத்தை இலங்கை நிறுவனத்திற்கும் மூன்றாம் கட்டத்தை ஐப்பான் நிறுவனத்துக்கும் வழங்கியுள்ளோம். அதன்பின்னர் நான்காம் கட்டத்தை கலகெதரவில் இருந்து கண்டி வரை நிர்மாணிக்க இந்திய நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி இது சர்வதேச நாடுகளை ஒன்றிணைத்த அபிவிருத்தி திட்டமாக மத்திய அதிவேக அமையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் விசேட அறிவிப்பு நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொழும்பிலிருந்து -கண்டிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுக்கின்றது. அதிகளவிலான வாகன நெரிசல் ஏற்படுகின்றது. இதன்படி கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்வதற்கு நான்கு மணிநேரம் செலாவகின்றது. இது தேசத்திற்கு பெரும் பாதிப்பாகும். இதன்படி கொழும்பு- கண்டி அதிவேக நிர்மாண பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி கொழும்பு -கண்டி அதிவேக பாதையின் நிர்மாண பணிகளில் முதலாவது கட்டத்தை சீனாவும் இரண்டாம் கட்டத்தை வரலாற்றில் முதற்தடவையாக இலங்கை நிறுவனம் பொறுப்பேற்றுள்ளன மூன்றாம் கட்டத்தை ஐப்பான் நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் நான்காவது கட்டத்தை கலகெதரவில் இருந்து கண்டிக்கு கொண்டு செல்வதற்கு இந்தியா நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. எனவே இது சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்த அதிவேக பாதையாகும்.
மேலும் மத்திய அதிவேக பாதையின் மூன்றாம் கட்டத்தை ஐப்பான் நாட்டின் இரு நிறுவனங்கள் பொறுப்பேற்றுள்ளன. இதன்படி மூன்றாம் கட்டத்தை இரு கட்டங்களான பிரித்து நிர்மாணிக்கவுள்ளனர். இதனால் வெகு சீக்கிரமாக நிர்மாண பணிகளை முடித்து கொள்ள முடியும். இதன்படி மூன்றாம் கட்டத்தை புஜிடா, டைசெய் ஆகிய நிறுவனங்களே பொறுப்பேற்றுள்ளன.
அத்துடன் கொழும்பு -கண்டி அதிவேக பாதையின் நிர்மாண பணிகளுக்கான செலவீனத்தை 25 பில்லியன் ரூபாவால் குறைத்துள்ளோம். இதன்படி மத்திய அதிவேக பாதையின் நிர்மாண பணிகளின் மூன்றாம் கட்ட பணியானது பொத்துஹரவில் இருந்து ஆரம்பித்து கலகெதரவில் நிறைவடைகின்றது. இந்த வீதிக்கு உயரமான 14 மேம்பாலங்கள் உள்ளடங்குகின்றன. எனினும் 159 பில்லியன் ரூபாவுக்கு ஐப்பான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விலைமனுவை ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டுடன் 134 பில்லியனாக குறைக்க முடிந்தது.
2019 ஆம் ஆண்டு உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைக்கபெறாது. இதனை உலக வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய அதிவேக பாதையின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு டோக்கியோ மிட்சுபிசி வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை.
கண்டி நகரின் அபிவிருத்தியின் ஒரு அங்கமாகவே மத்திய அதிவேக நிர்மாணிக்கப்படுகின்றது. கண்டி நகரில் தொழில்நுட்ப பூங்கா, கைத்தொழில் பேட்டை உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது அதிவேக வீதி உறுதுணையான இருக்கும். எனவே மத்திய அதிவேக நிர்மாண பணிகள் தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது. அதிவேக பாதை மக்களுக்காகவே நிர்மாணிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு வழங்க வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறமாட்டோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM