கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும்.
மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விமானப்படையினர் தெரிவிக்கின்றனர்.
அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திற்கு பின் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் முகாம் ஒன்று இருந்ததாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM