நாட்டிய கலா மந்திர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனரான ‘கலாசூரி’, ‘ஆச்சார்ய கலா சாகரா’, ‘விஸ்வ ரங்காபிமானய’, ‘வனிதாபிமான’ வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களின் தயாரிப்பில் ‘நாட்டிய வைபவம்’எனும் சிறப்பான நடன நிகழ்ச்சி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR), கொழும்பு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி 2026 ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் தெஹிவளை எஸ். டி. எஸ். ஜெயசிங்ஹ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் முதல் செயலாளர் சௌரப் சப்லோக் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். கௌரவ விருந்தினராக வழக்கறிஞரும் கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவருமான சுகந்தி ராஜகுலேந்திரா அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஹட்டன் நேஷனல் வங்கி, வெள்ளவத்தை கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் செல்வி சுமதி சுப்பிரமணியம் மற்றும் கமெர்ஷியல் வங்கி, வெள்ளவத்தை கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் கஜரூபன் தபோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நாட்டிய கலா மந்திர் மாணவர்களின் அழகிய நாட்டிய நிகழ்ச்சிகள் இடம்பெற்று, இந்திய நாட்டிய கலையின் அழகும் செழுமையான கலாச்சார மரபும் வெளிப்படுத்தப்படும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM