எரிபொருள் விநியோகச் சிக்கல்கள்  - அமைச்சரவை முக்கிய நடவடிக்கைகள்

17 Mar, 2026 | 03:04 PM
image

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள யுத்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டும், தற்போது நிலவும் எரிபொருள் இருப்புகளைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும் 2026.03.16ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரச அலுவலகங்களைச் சாதாரண முறையில் நடாத்திச் செல்லும்போது உத்தியோகத்தர்களின் போக்குவரத்து மற்றும் அலுவலகப் பராமரிப்பிற்காகக் கணிசமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அரச அலுவலகக் கடமைகளுக்கான விடுமுறை தினமாகக் கருதப்படல் வேண்டும்.

புதன்கிழமைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கடமைகளை அவ்வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ளுதல் வேண்டும். ஆயினும், ஸ்தாபனத் தலைவர் ஒரு உத்தியோகத்தரைச் சேவைக்கு அழைக்கத் தீர்மானிப்பின், அதற்குத் தடையிருக்காது. இதற்காக விடுமுறை தினச் சம்பளம், மேலதிக நேரம் அல்லது ஈடுசெய் விடுமுறைகள் வழங்கப்பட மாட்டாது.

உத்தியோகத்தரை அலுவலகத்திற்கு அழைக்காது, ஏற்கனவே உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கான வேலைத்திட்டமொன்றினை திணைக்கள/கூட்டுத்தாபனத் தலைவர்கள் தயாரித்துக்கொள்ள முடியும்.

புதன்கிழமைகளில் மூடப்படும் அலுவலகங்களின் உத்தியோகத்தர்களை, அவ்வாரத்தின் சனி, ஞாயிறு அல்லது அரச விடுமுறை தினங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு அல்லது ஈடுசெய் விடுமுறை அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தக் கூடாது.

அவசரத் தேவையின் அடிப்படையில் விடுமுறை நாட்களில் உத்தியோகத்தர்களை அழைக்க வேண்டியிருப்பின், உரிய செயலாளர்கள் அல்லது தலைவர்களின் அனுமதியுடன் அழைக்க முடியும். இதற்காக மேலதிக நேரக் கொடுப்பனவு அல்லது ஈடுசெய் விடுமுறை வழங்கத் தடையிருக்காது.

டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தக் கடமைகளுக்காக உத்தியோகத்தர்களை அழைப்பதற்கான அதிகாரம் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நீதித்துறை: நீதிச் சேவை ஆணைக்குழுவின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்கள்: கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரின் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.

கூட்டுத்தாபனங்கள்: ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரிடம் வினவி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலதிகக் கட்டுப்பாடுகள்: அரச நிறுவனங்களில் விழாக்கள் மற்றும் கருத்தரங்குகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான 04/2022 இலக்கச் சுற்றறிக்கையையும் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள்: அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சுழற்சி முறையில் இயங்கும் தாபனங்களுக்கு இந்த விடுமுறை முறைமை பொருந்தாது. அவை புதன்கிழமையைச் சாதாரண கடமை நாளாகக் கருதிச் செயற்படவேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19
news-image

இலங்கை மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார...

2026-04-20 19:50:09
news-image

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

2026-04-20 19:34:33
news-image

மிஹிந்தலையில் பெண்களைத் தாக்கிய விமானப்படை வீரர்...

2026-04-20 17:50:02
news-image

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க ஜனாதிபதி...

2026-04-20 17:37:55
news-image

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அரசாங்க அதிபருக்கும்...

2026-04-20 17:32:54