அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருட்களை தேயிலை பைகளில் வைத்து நீண்டகாலமாக கடத்தி வந்த 48 வயதான சந்தேக நபரை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்த தேயிலை பையில் மறைத்து வைக்கப்பட்டு, விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ஹெரோயின் பொதிகளே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொதிகளுடன் சந்தேக நபர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர், சந்தேக நபர் திங்கட்கிழமை (16) கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் வியாழக்கிழமை (19) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM