நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி இன்று திங்கட்கிழமை (16) ஜெயதிலக்க விளையாட்டு அரங்குவில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ். ரகு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
நிகழ்வில் பழைய மாணவர் சங்க நிர்வாக செயற்குழு செயலாளர் திரு. எஸ். சுகுமார், உப செயலாளர் ஆர். சிவயோகநாதன், பொருளாளர் எஸ். ராஜசேகரன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ். சண்முகராஜ் மற்றும் நாவலப்பிட்டி நகர உப பிதா சுரேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த வருடாந்த விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதோடு, ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இல்லங்களுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன், மாணவர்களின் ஆர்வமூட்டும் பங்கேற்புடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM