கடந்த புதன்கிழமை (11) நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவருக்கு எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியல் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹட்டன் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் வன துரை அதிகாரிகள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் இனைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 52 வயது 37 வயது மதிக்கத்தக்க நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து வேட்டையாடிய மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM