ஜகத் ஜய­சூ­ரிய விவ­காரம் சபையில் கடும் சர்ச்சை

Published By: Robert

07 Sep, 2017 | 11:17 AM
image

ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்­க்கட்­சி­யினர் எழுப்­பிய கேள்­விக்கு அர­சாங்க தரப்பில் இருந்து பதி­ல­ளிப்­ப­தற்கு இரு வாரகால அவ­காசம் கோரப்­பட்­டதை அடுத்துநேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் சபையில் எழுந்து நின்று கோஷ­மிட்டு உடன் பதி­ல­ளிக்­கு­மாறு கோரினர்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்­கட்சி பாரா­ளு­மன்ற குழு தலைவர் தினேஷ் குண­வர்­தன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்த போதே குறித்­தான சர்ச்­சை­யான நிலைமை ஏற்­பட்­டது.

தினேஷ் குண­வர்­தன எம்.பி கேள்வி எழுப்பும் போது,

முன்னாள் இரா­ணுவ தள­பதி மற்றும் பாது­காப்பு பிர­தானி என்ற வகை­யிலும் இரா­ஜ­தந்­திர உயர் அதி­காரி என்ற  வகை­யிலும்   ஜகத் ஜய­சூ­ரி­யவை பாது­காப்­ப­தற்கு இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்கை என்ன? ஜகத் ஜய­சூ­ரி­யவை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம்  நட­வ­டிக்கை எடுக்­குமா? ஜகத் ஜய­சூ­ரிய விவ­காரம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்­சேகா முன்­வைத்­துள்ள கருத்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடா? இல்­லையேல் முர­ணான கருத்தை முன்­வைத்த அமைச்சர் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்கும் என  தினேஷ் குண­வர்த்­தன  கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளிப்­ப­தற்கு சம்­பந்­தப்­பட்ட அமைச்­ச­ரான வெளி­வி­வ­கார அமைச்சர் திலக்  மாரப்­பன சபையில் இல்­லாத கார­ணத்­தினால் சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல எழுந்து இரு வார கால அவ­காசம் கோரினார். 

இரு வார கால­அ­வ­காசம் கோரப்­பட்­டதை அடுத்து   சபையில் கூட்டு எதிர்­கட்­சி­யினர் எழுந்து நின்று கோஷ­மிட்டு உடன் பதி­ல­ளிக்க  கோரினர். விமல் வீர­வன்ச , மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே,  பிர­சன்ன ரண­வீர உள்­ளிட்ட கூட்டு எதி­ரக்­கட்சி எம்.பியினர் இவ்­வாறு கோஷ­மிட்­டனர். இதன்­போது அமை­தி­யாக சபையில் இருக்­கு­மாறு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய கோரினார். 

  சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல பதி­ல­ளிக்கும் போது,

ஜகத் ஜய­சூ­ரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்த கருத்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு அல்ல. நாங்கள் எந்­த­வொரு இரா­ணுவ வீரர்­க­ளையும் சிறையில் அடைக்க மாட்டோம். முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­காவை சிறையில் அடைத்­தது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சி­யி­லாகும். எனினும் தற்­போது சரத் பொன்­சேகா தொடர்பில் எதி­ர­ணி­யினர் முதலை கண்ணீர் வடிக்­கின்­றனர். எனவே ஜகத் ஜய­சூ­ரிய குறித்­தான பதில் இரு வாரத்தில் வழங்­குவோம் என்றார்.

இதன்­போது விமல் வீர­வன்ச இடை­ந­டுவே ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி பேசு­கையில்,

இதனை சாதா­ர­ண­மாக விட்டு விட­மு­டி­யாது. இது   யுத்த குற்­றத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மாகும். ஆகவே அர­சாங்கம் ஜகத் ஜய­சூ­ரி­யவை   பாது­காப்­ப­தற்கு எடுத்­துள்ள நட­வ­டிக்கை குறித்து உடன் பதில் வழங்க வேண்டும்  என்றார். 

இந்த கேள்­விக்கு பதி­ல­ளிப்­ப­தற்கு இரு வாரம் தேவை­யில்லை. இன்றே பதி­ல­ளிக்க முடியும் ஏன் தாமதம் என தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இதன்போது இரு வாரத்தில் அரசாஙகம் பதில் வழங்கும் என சபை முதல்வர் உறுதியளித்துள்ளார். ஆகவே பொறுத்திருங்கள் என கூறி சபாநாயகர் கருஜெய சூரிய சர்ச்சையான நிலைமையை முடிவுக்கு கொண்டு வந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மரக்கடத்தல் முறியடிப்பு : வாகனத்துடன்...

2025-02-10 16:02:03
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05