இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரான மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தாய்லாந்து பாராளுமன்றத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
'திறந்த அரசாங்க கூட்டாண்மை' என்ற தலைப்பில் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றபோதே அவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தையும் பார்வையிடச் சென்றிருந்தார்.
இதன்போது உள்ளடக்கமான ஆட்சி மற்றும் ஜனநாயகப் பங்கேற்பை வலுப்படுத்துவது தொடர்பாக தாய்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முதலானோருடன் கலந்துரையாடினார்.

தாய்லாந்தின் பாங்காக்கில் Inclusion Champions Network Study Visit நிகழ்வு மார்ச் 10 முதல் 14 வரை நடைபெறுகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தாய்லாந்து பாராளுமன்றத்தையும் பார்வையிட்ட சாணக்கியன், அதனைத் தொடர்ந்து, செனட்டர் Pornchai Witayalerdpanஐயும் சந்தித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள், குடியுரிமை அமைப்புகள் மற்றும் பாலின சமத்துவம் மற்றும் சமூக உட்சேர்க்கை தொடர்பாக செயற்பட்டு வரும் சர்வதேச கூட்டாளர்களுடனும் கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
இது தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவித்த சாணக்கியன்,
இந்த சந்திப்புகள் மூலம் திறந்த மற்றும் பொறுப்புணர்வு கொண்ட பாராளுமன்ற நடைமுறைகளை முன்னேற்றுவதில் இலங்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன் ஊடாக ஜனநாயக நிறுவனங்களில் உட்சேர்க்கையை வலுப்படுத்துவதில் தாய்லாந்து பின்பற்றும் அணுகுமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடிந்தது.
பாராளுமன்றங்கள் அனைத்து சமூகங்களின் தேவைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் ஆட்சி அமைப்புகள் உட்சேர்க்கைமிக்கதாக அமைய முக்கிய பங்காற்ற வேண்டும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் வரலாற்றாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவமும் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்கள், குடியுரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்கள் ஆகியோருக்கிடையிலான ஒத்துழைப்பு, ஜனநாயக செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, பிரதிநிதித்துவம் மற்றும் சமமான பங்கேற்பை வலுப்படுத்துவதில் முக்கியமானதாகும் என்கிறார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM