பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்களுக்காக நுவரெலியா 'லெஷர் வில்லேஜில்' (Leisure Village) திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை அண்மையில் நடைபெற்றது.
நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் உதவி சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்காக, நேர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்த முகாமைத்துவம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இரண்டு நாள் வதிவிடப் பயிற்சித் திட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சிப் பட்டறையானது, கருத்தியல் சார்ந்த அமர்வுகள் மற்றும் செயல்முறை அமர்வுகளைக் கொண்டிருந்தது.
இதன்போது, உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை ஆற்றும்போது களத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தனிப்பட்டரீதியில் அவர்கள் சந்திக்கும் தொழில்முறை சிக்கல்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
நாள்தோறும் சிக்கலாகி வரும் இன்றைய சமூகத்தில், சிறுவர்களுடன் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பொறுப்புகளை நிறைவேற்றும் போது ஒத்துணர்வு (Empathy) மற்றும் உணர்வு மேலாண்மையினைக் குறித்துத் தங்களை மீளப்புதுப்பித்துக்கொள்வது (refresh) காலத்தின் தேவையாகும்.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் (மத்திய அரசு) ஆணையாளர் காயனி கௌசல்யா விஜேசிங்க, நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.பி. லிந்தகும்புர, இரத்தினபுரி பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிறி, நுவரெலியா பிரதேச செயலாளர் டி.ஏ.பி. தனன்சூரிய மற்றும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM