போர்ச் சூழலில் ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா சென்றடைந்த முதல் எண்ணெய்க் கப்பல்! - என்ன நடந்தது?

13 Mar, 2026 | 12:33 PM
image

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் தொடர்ந்து அறிவித்து வருகிறது. கச்சா எண்ணெய் விநியோகத்துக்கான முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதையாக விளங்கும் நீரிணை வழியே எண்ணெய் கப்பல்கள் கடக்க முடியாத நிலை தற்போதும் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பல்வேறு தடைகளைக் கடந்து, கச்சா எண்ணெய் கப்பலொன்று இந்தியா சென்றடைந்துள்ளது. 

புதன்கிழமை (11) இரவு மும்பை துறைமுகத்தை அடைந்த இந்த கப்பல் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 335 தொன் (சுமார் 10 லட்சம் பீப்பாய்கள்) கச்சா எண்ணெய்யைத் தாங்கிச் சென்றுள்ளது. ஈரான், மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு மத்தியில் முதல் முதலாக ஹோர்முஸ் நீரிணையை கடந்து, பாதுகாப்பாக ஒரு எண்ணெய்க் கப்பல் சென்றுள்ளதெனில், அது இந்தப் கப்பலே என்று கூறப்படுகிறது. 

லைபீரிய நாட்டுக் கொடியுடன் சென்ற “ஷென்லொங் சூயல்மாக்ஸ்” என்ற கப்பல், சவூதி அரேபியாவின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி முனையமான ராஸ் தனுராவிலிருந்து (Ras Tanura) கடந்த 1ஆம் திகதி அதன் பயணத்தை தொடங்கியுள்ளது. 

இந்தியரான கெப்டன் சுக்ஷாந்த் சிங் சந்து தலைமையில் 29 பேர் கொண்ட குழுவினர் இந்தக் கப்பலில் பயணித்துள்ளனர். 

இந்த பிரம்மாண்ட கப்பல், தனது பயணத்தின்போது உலகின் மிக முக்கியமான எண்ணெய்க் கப்பல்களின் கடல்வழிப் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை 8ஆம் திகதி கடந்ததாக கூறப்படுகிறது. 

ஈரான் படைகளின் தாக்குதல் மற்றும் வேறு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக தப்பிக்கவும் கண்காணிப்பில் சிக்காமல் இருக்கவும், கப்பலானது நீரிணையை கடக்க முற்பட்டபோது, அதன் தானியங்கி அடையாள அமைப்பான ஏ.ஐ.எஸ் இணைப்பு தற்காலிகமாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலின் அமைவிடம், அதன் இயக்கத்தை காட்டும் சமிக்ஞை இணைப்பை நிறுத்திவிட்டு, “டார்க் மோட்”  முறையில் ரகசியமாக ஹோர்முஸ் நீரிணையை இந்த எண்ணெய்க் கப்பல் கடந்ததாகதாகவும் பின்னர், குறிப்பிட்ட கடற்பரப்பு எல்லையை பாதுகாப்பாக கடந்த பின்னர், 9ஆம் திகதி மீண்டும் அந்த இணைப்பை இயக்கியதாகவும் கூறப்படுகிறது. 

AIS எனப்படும் கப்பல் அடையாள ஒளி அமைப்பை, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக செயலிழக்கச் செய்து பின்னர், இயக்கியமையே ஹோர்முஸ் நீரிணையை இந்த  எண்ணெய் கப்பல் பாதுகாப்பாக கடக்க காரணம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர்க்கால சூழலில் எதிரிப் படையினர் கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்களின் அடையாளம், வேகம், இருப்பிடத்தை  கண்டறிவதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் கப்பல்களின் தொழில்நுட்ப இணைப்புகள் அணைக்கப்படக்கூடும் என குறிப்பிடப்படுகிறது. 

தொழில்நுட்ப ரீதியான நுட்பங்களை கையாண்டு ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து புதன்கிழமை மும்பை துறைமுகத்தை  இந்த எண்ணெய்க் கப்பல் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா–ஈரான் 14 மணி நேர பேச்சுவார்த்தை...

2026-04-12 07:04:54
news-image

பேச்சுவார்த்தையால் அமைதி திரும்பும்: பாகிஸ்தான் பிரதமர்...

2026-04-12 00:02:11
news-image

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா...

2026-04-11 18:40:49
news-image

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி : பேஸ்புக்,...

2026-04-11 17:59:18
news-image

அமெரிக்க துணை ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரை...

2026-04-11 17:37:56
news-image

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்...

2026-04-11 18:16:49
news-image

ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா...

2026-04-11 15:39:27
news-image

உத்தர பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு...

2026-04-11 14:21:09
news-image

பாகிஸ்தானில் தரையிறங்கிய “மினாப் 168” விமானம்...

2026-04-11 13:30:10
news-image

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று...

2026-04-11 13:19:55
news-image

பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தை...

2026-04-11 12:14:50
news-image

இலங்கை துணைத் தூதுவரின் பங்கேற்பு: புதுச்சேரியில்...

2026-04-11 12:34:13