(நெவில் அன்தனி)
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான சென். பட்றிக்ஸ் அணிக்கும் யாழ்ப்பாணம் கல்லூரி அணிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் போர் மாபெரும் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த யாழ்ப்பாணம் கல்லூரி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் சென் பட்றிக்ஸ் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எஸ். நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 24 ஓட்டங்களுடனும் சிவநாதன் ஷெஹான் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
முன்னதாக யாழ்ப்பாணம் கல்லூரியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தபோதிலும் முதல் 4 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வீழ்ந்ததால் அவ்வணியினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது.
ரொபின்சன் உதயகுமார் ஜோன்சன் (41), சுபீசன் தக்சிகன் (7) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்தனர்.
ஆனால், 4 விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் யாழ்ப்பாணம் கல்லூரி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. (77 - 4 விக்.)
இந்நிலையில், ஹமிஷ் ஹார்மிஷன், உதயராஜா கென்றிக்சன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.
ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
ஹார்மிஷன் 5 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களையும் கென்றிக்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
அனுஷாந்தன் ஹார்மிஷன் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.


பந்துவீச்சில் மதியழகன் ஸ்டீவ் ஆதித்தியா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18 ஓவர்களில் 25 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களையும் ஜெபின்சன் கெமிஷன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM