ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி செலுத்திய இளைஞர் கைது

12 Mar, 2026 | 03:31 PM
image

(செ.சுபதர்ஷனி)

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டியை செலுத்திய 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 அவர் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனத்தை செலுத்தியமை மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியு.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப்பிரிவில் புதன்கிழமை (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் முச்சக்கரவண்டி  ஒற்றை மிக ஆபத்தான முறையிலும், ஏனைய வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் செலுத்தப்படும் வீடியோ காட்சிகள் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன.சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வீடியோ காட்சிகளின் அடிப்படையில், ஒரு சக்கரத்தில்  அபாயகரமான முறையில் முச்சக்கரவண்டியை செலுத்திய 26 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் கஞ்சா போதை பொருளைப்பயன்படுத்தி  வாகனத்தை செலுத்தியமை மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கண்டி - கட்டுகஸ்தோட்டை பகுதியில் முச்சக்கரவண்டியில் சாகசம் செய்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, வாகன இலக்கத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய கடுகண்ணாவ பல பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், 10 ஆம் திகதி இரவு முச்சக்கரவண்டியுடன் கைது செய்யப்பட்டார்.

வீதியில் பயணித்த ஏனைய  வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையிலும், உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும்  வாகனத்தை செலுத்தியதால், இவருக்கு எதிராக " கொலை முயற்சி" உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. 

 முறையான வாகன உரிமம்  மாற்றம் இன்றி குறித்த நபருக்கு வாகனத்தை விற்பனை செய்த நபருக்கு எதிராகவும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.   விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் குறித்த காணொளியை  பொலிஸாருக்கு வழங்கிய நபருக்கு நன்றி தெரிவிப்பதோடு, இத்தகைய ஒழுக்கமற்ற சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று கொச்சிக்கடை ஆலய ஆராதனையை முன்னிட்டு...

2026-04-21 05:20:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல்களின்...

2026-04-21 05:11:20
news-image

டீசல் கொள்வனவு: 350 கோடி ரூபா...

2026-04-21 04:32:23
news-image

டீசல் கொள்வனவு விவகாரம்: குமார ஜயகொடி...

2026-04-21 04:18:14
news-image

கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த...

2026-04-21 03:56:36
news-image

மே தினக் கூட்டம்: சஜித்திடமிருந்து அழைப்பு...

2026-04-20 16:09:35
news-image

பௌத்த எழுச்சி வட கிழக்கிற்கே அவசியம்...

2026-04-20 17:07:10
news-image

இலங்கை திரும்ப விரும்புவோருக்கான ஒத்துழைப்புக்களை துரிதப்படுத்துங்கள்...

2026-04-20 16:39:59
news-image

நிலக்கரியைப் பால் ஊற்றி வெளுப்பாக்க அரசாங்கம்...

2026-04-20 16:40:28
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது...

2026-04-20 17:07:36
news-image

மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடும் அரசாங்கம்!...

2026-04-20 17:33:18
news-image

தேசிய கல்வி நிறுவனத்தின் புதிய பணிப்பாளர்...

2026-04-20 21:58:19