மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய பொலிஸார் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்னவின் வழிகாட்டலில், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோனின் மேற்பார்வையில் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பகுதியில் இக்கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, சுமார் 70 துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவற்றில் இருளில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர்கள் (ஒளிர் அட்டைகள்) ஒட்டப்பட்டன. இரவு வேளைகளில் பின்னால் வரும் வாகனங்களுக்கு, முன்னால் துவிச்சக்கர வண்டி செல்வதை இதன் மூலம் தெளிவாக அடையாளப்படுத்த முடியும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்துக் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.எம். சந்தன பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும்போது;
"இரவு வேளைகளில் துவிச்சக்கரவண்டிகளில் பயணிக்கும் வயோதிபர்கள் கறுப்பு அல்லது அடர் பச்சை நிற ஆடைகளைத் தவிர்த்து, வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். இதன் மூலம் பின்னால் வரும் வாகன சாரதிகளுக்கு வீதியில் பயணிக்கும் ஆட்களை இலகுவாக கண்டுகொள்ள முடியும். இது விபத்துகளைத் தவிர்க்க பெரிதும் உதவும். மேலும், துவிச்சக்கரவண்டிகளை சரியான முறையில் பயன்படுத்தாதவர்கள் மீது வருங்காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM