(நா.தனுஜா)
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையில் மூண்ட போர் சூழ்நிலை தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
இந்நிலையில் இலங்கையில் இருப்பவர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் தமது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைத் தொடர்புகொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
அவர்களுக்கு உதவ முன்வந்துள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கம், +94 70 378 8614 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொள்ளுமாறு அறிவித்துள்ளது.
அத்தோடு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் ஊடாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அவசியமான வசதிகள் செய்துதரப்படும் என்றும் அச்சங்கம் விளக்கமளித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM