தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு இன்று திறன் பலகை (Smart Board) ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுக்கும் வகையில் இந்த திறன் பலகை மனித நேய நம்பிக்கை நிதியம் அமைப்பினால் வழங்கப்பட்டது. பாடசாலையில் பிரதி அதிபர் பெரியநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் . பிரதம அதிதியாக மனிதநேய நம்பிக்கை நிதியமைப்பின் வளையகத்திற்கான இணைப்பாளர் ஐயா கருப்பன் கிருஷ்ணராஜா அவர்களும் விசேட அதிதியாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப பீடாதிபதி மேத்தியூ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

புதிய கல்வி சீரமைப்பின் பிரகாரம் நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க வல்ல பாடசாலைகளில் இவ்வாறான திறன் பலகைகள் இருப்பது அத்தியாவசியமானது. அந்த வகையில் பாரதி மகா வித்தியாலயத்திற்கு கிடைத்த இந்த திறன் பலகையை கொண்டு மாணவர்கள் முழுமையான பயன் பெறுவர். பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திறன் பாட ஆசிரியரும் Smart unit இன் பொறுப்பாசிரியருமான கமலேஸ்வரி பாலகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திரன் பாட ஆசிரியர் ஆலோசகர் என்டன் இக்னேசியஸ் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியின் உப்பிடாதிபதி , மனிதநேய அமைப்பின் மலையக இணைப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகிய மூவரும் சேவை பாராட்டி பாடசாலை நிர்வாகத்தினர் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வானது இன்று பி.ப 2 மணிக்கு பாரதி மகா வித்தியாலய திறன் வகுப்பறையில் (Smart Unit) நடைபெற்றது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM