தெற்கு கடற்பரப்பில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த படகு மற்றும் போதைப்பொருள் என்பன திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, 103 கிலோகிராம் ஹெரோயின், சுமார் 01 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் குறித்த படகில் இருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இந்த போதைப்பொருட்களை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது பாரிய அளவிலான கடத்தல் நடவடிக்கையாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM