(எம்.மனோசித்ரா)
ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்னதாகவே அறிவித்ததா என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதேவேளை இனிமேல் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கான உறுதியை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (6) ஐக்கிய தேசிய கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
எமது பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள் ஈரானிய கப்பல் ஒன்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் மூழ்கடிக்கப்பட்டமை குறித்து அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் காப்பது கவலைக்குரியது.
நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்துக்குள்ளும், கொழும்பு பாதுகாப்பு பிணைப்பின் எல்லைக்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை குறித்து, அதற்கு முன்னதாக அமெரிக்காவினால் தமக்கு அறிவிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன. இது எமது வர்த்தக நலன்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கப்பல் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் செலவு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் இனிமேல் இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கான உறுதியை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், இதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம் குறித்து சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி அதிகாரிகளுடன் அரசாங்கம் கலந்துரையாட வேண்டும்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM