இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் வியாழக்கிழமை ஜோர்ஹாட்டிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் பகுதியில் விபத்துக்குள்ளானது என இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளது.
“சுகோய்-30 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானிகள் அனுஜ், புர்வேஷ் துராக்கர் ஆகியோர் உயிரிழந்ததை விமானப்படை உறுதிப்படுத்துகிறது.
உயிரிழந்த விமானிகளுக்கு இந்திய விமானப்படையின் அனைத்து பணியாளர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான நேரத்தில் நாங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறோம்,” என இந்திய விமானப்படையின் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் விமானம் இரண்டு இருக்கைகள் கொண்டது. பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நீண்ட தூர போர் விமானம் ரஷ்யாவின் விமான தயாரிப்பு நிறுவனமான Sukhoi நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்திய விமானப்படைக்காக HAL (Hindustan Aeronautics Limited) நிறுவனத்தால் உரிமம் பெறப்பட்டு இவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்திய விமானப்படை தற்போது 260-க்கும் மேற்பட்ட சுகோய்-30 MKI போர் விமானங்களை இயக்கி வருகிறது. இதற்கு முன்பு 2024 ஜூன் மாதத்தில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
மேலும் 2023 ஜனவரியில் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஒரு சுகோய்-30 விமானமும் விபத்துக்குள்ளானது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM