யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகு கடற்பயணத்திற்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா?, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைந்திருந்ததா?, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் (உயிர் காப்பு அங்கிகள் போன்றவை) முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக்கூடாது. கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM