இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 12:59 PM
image

இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.

மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் சட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடத்துறைகளிலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டங்கள்

அனைத்து மட்டங்களிலுமான கற்கைகளுக்காக பின்வரும் நான்கு பிரதான திட்டங்களின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship): பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளுக்கு இது பொருந்தும்.

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship): பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலைப் பட்டப்படிப்புகள் (Masters).

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship): தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் தொழில்நுட்ப (B.Tech) பட்டப்படிப்புகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காமன்வெல்த் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம் உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்குப் பொருந்தும்.

மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்:

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதுடன் பின்வரும் மேலதிக வசதிகளும் வழங்கப்படும்:

மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு

புத்தகங்கள் மற்றும் எழுதுகருவிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு.

இந்தியாவுக்கான விமானப் பயணச் சீட்டு.

கல்விச் சுற்றுலாக்களுக்கான விசேட நிதி உதவி.

பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே தங்குமிட வசதி (Hostel facility).

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரிகள் இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மெரிட் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை கல்வி அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52