புல்மோட்டையில் அதிக விலைக்கு டீசல் விற்ற கடை உரிமையாளர் கைது!

04 Mar, 2026 | 10:59 AM
image

திருகோணமலை - புல்மோட்டை நகரில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த கடை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு முறையான அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்ட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது.

சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புல்மோட்டை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் புதன்கிழமை  (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் ...

2026-03-13 19:16:41
news-image

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு...

2026-03-13 17:26:42
news-image

காலி சிறைச்சாலை கைதி தப்பியோட முயற்சி...

2026-03-13 17:25:47
news-image

அடுத்த 36 மணித்தியாலத்திற்கு பலத்த மழை...

2026-03-13 17:21:27
news-image

தாய்லாந்து பாராளுமன்றத்தை பார்வையிட்டார் சாணக்கியன் 

2026-03-13 16:58:41
news-image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய...

2026-03-13 16:21:12
news-image

தாய்லாந்தில் நடைபெற்ற திறந்த அரசாங்க கூட்டாண்மை...

2026-03-13 16:22:22
news-image

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்...

2026-03-13 16:14:27
news-image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு...

2026-03-13 17:29:59
news-image

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள்...

2026-03-13 15:37:03
news-image

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை –...

2026-03-13 14:38:04
news-image

‘தெமட்டகொட ருவான்’ பிணை விவகாரம்: 50...

2026-03-13 14:39:07