இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையில், தாமும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து, இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க லெபனானில் உள்ள கூடுதல் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு (IDF)க்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், “லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த அமைப்பு பெரும் விலையைக் கொடுத்து வருகிறது இனியும் கொடுக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள கலிலேயா பகுதி சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பிராந்திய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதுடன், பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM