இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் வித்தக விழாவும் நீதி முரசு நூல் வெளியீட்டு விழாவும் கடந்த சனிக்கிழமை 28ஆம் திகதி இலங்கை சட்டக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
2025ஆம் ஆண்டு நிர்வாக குழு தலைவர் க.உமாசுதன் மற்றும் செயலாளர் எம்.என். பாத்திமா நஸ்லா ஆகியோரின் தலைமையில் மன்றம் 75 எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனக ஈஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மேலதிக சட்டவரைஞரும் தமிழ் மன்றத்தின் பெரும்பொருளாளர் செல்வ குணபாலனால் நூல் மதிப்பீட்டு உரையை செய்யப்பட்டது.
தமிழ் மன்றத்தினால் நடத்தப்பட்ட பல்வேறு விவாதப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் மற்றும் சட்ட ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு 57 ஆவது நீதி முரசு சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதன் போது அதிதிகள் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்ததுடன் அதிதிகளுக்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றன.









(படப்பிடிப்பு – ஜே.சுஜீவகுமார்)













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM