(நெவில் அன்தனி)
டெல்லி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் தென் ஆபிரிக்கா 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் ஸிம்பாப்வே அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா சகலதுறைகளிலும் பிரகாசித்தபோதிலும் அவரது அணியினால் வெற்றிபெற முடியாமல் போனது.
இதனை அடுத்து இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இக் குழுவில் முதலிடத்தில் உள்ள தென் ஆபிரிக்கா, பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற நியூஸிலாந்தை கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மாத்திரம் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களைப் பெற்றார்.
அவரை விட க்ளைவ் மதண்டே 26 ஓட்டங்களைப் பெற்றார்.
வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
பந்துவீச்சில் க்வேனா மஃபாக்கா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கொர்பின் பொஷ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தென் அபிரிக்காவின் முதல் இரண்டு விக்கெட்கள் முதல் 3 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டதால் அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், அடுத்த நால்வரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தனர்.
ரெயான் ரிக்ல்டன் 31 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரெவிஸ் 42 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 22 ஓட்டங்களையும் ட்ரைஸ்டன் ஆட்டம் இழக்காமல் 21 ஓட்டங்களையும் ஜோர்ஜ் லிண்டே ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.
சிக்கந்தர் ராஸா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனானார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM