பஸ்ஸுக்காக காத்திருந்த மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்

Published By: Digital Desk 7

04 Sep, 2017 | 04:20 PM
image

வவுனியாவில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை வவனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, வேலன்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய  பாடசாலை மாணவன் நேற்று  மாலை 6 மணியளவில் கிரிக்கெட் பயிற்சி முடிந்து வீடு செல்வதற்காக வவுனியா பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

பேருந்து இல்லாததன் காரணமாக அங்கு நின்ற வேளை இரவு  8 மணியளவில் இ.போ.ச.  பேருந்து தரிப்பிடத்தில் செட்டிகுளம், முதலியாகுளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் குறித்த சிறுவனை அழைத்து தனியாக நிற்பதற்கான காரணத்தைக் கேட்டறிந்ததுடன் நாளை காலை அனுப்பிவைப்பதாகத் தெரிவித்து முச்சக்கரவண்டியில் வெளிக்குளம் பகுதியிலுள்ள வாடகை வீடொன்றிலிருக்கும் தனது வீட்டிற்கு நேற்று இரவு அழைத்துச் சென்று மாணவனை அங்கு தங்கவைத்து உணவுப் பொருட்களுடன் மயக்க மருந்தை கொடுத்து துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார் .

குறித்த நபர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட,  மாணவன் குறித்த வீட்டிலிருந்து தப்பித்து மறுபடியும் இரவு 11 மணியளவில் இ.போ.ச. பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இ.போ.ச பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மாணவனிடம் அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் இரவு நேரத்தில் தனியாக நிற்பதற்கான காரணத்தினையும் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார். இதையடுத்து குறித்த ஆசிரியர் மாணவனின் தந்தையிடம் அழைத்துச் சென்று நிலைமைகளைத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மாணவனின் தந்தை  தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.   

இதையடுத்து மாணவனிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

34 வயதுடைய குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிகிச்சைகளுக்காகவும் வைத்திய சோதனைக்காகவும் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15